மோடி & ஜி ஜின்பிங் சந்திப்பிற்காக சென்னை போலீஸ் போட்ட ஹை செக்யூரிட்டி பிளான்! – முழு விபரம்!

மோடி & ஜி ஜின்பிங் சந்திப்பிற்காக சென்னை போலீஸ் போட்ட ஹை செக்யூரிட்டி பிளான்! – முழு விபரம்!

ஹிஸ்டாரிக்கல் பிளேசான மாமல்லபுரத்தில், பாரதப் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு ஒரு வழியா நடந்து முடிஞ்சிட்டுது. இந்த இண்டர்நேஷனல் அட்ராக்‌ஷன் மீட், எந்தவொரு பிரச்னையோ குறுக்கீட்டோ இல்லாம நடைபெற, பாதுகாப்புக் காரணங்களுக்காக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் எந்தவொரு பாதுகாப்புக் குறைபாடுமின்றி, வெற்றிகரமாக முடிந்த இந்தச் சந்திப்புக்கு பக்கபலமாக இருந்த காவல்துறையினருக்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். சிட்டி கமிஷனரும் ஓப்பன் மைக்கில் எல்லோரையும் பாராட்டினார். இந் நிலையில், இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கு முன், என்ன மாதிரியான பாதுகாப்பு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டது என்பதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் விளக்கமளிச்சார்.

இது குறிச்சு டெபுடி கமிஷனர் சுதாகர் விவரிச்சது இதுதான் ,

“நம்ம சென்னயிலே சமீப காலத்தில் எந்தவொரு உலக தலைவரும் சாலை மார்க்கமா, இவ்வளவு நீண்டதூரத்தில் பயணித்ததில்லை. இதற்காக, முழு பந்தோபஸ்து கொடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அதுக்காக ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்யபட வேண்டியிருந்துச்சு.

மொதல்லே, இப்போது இருக்கும் சாலைகளின் நிலையை அறிந்து கொள்ற்தற்காக, 110 சப் இன்ஸ் பெக்டருங்க தலைமையில் 200 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 35 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வீடா போய் ஓட்டர் லிஸ்ட் எல்லாம் வச்சி விசாரணை நடத்தினாங்க.

இதற்கு முன்னதா, பிரைன் ஸ்டார்மிங் ஆபரேஷன் ஒன்றை நடத்தினோம். அதில், விவிஐபி பயணத்தின்போது என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்று ஆராய்ஞ்சோம். அச்சுறுத்தல் என்னும்போது, போராட்டம் தொடங்கி தாக்குதல் வரை என்னமாதிரியான அச்சுறுதலுக்கு வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ந்தோம். அதிலிருந்து ஒரு செக் லிஸ்ட் தயாரித்தோம். அதில் ஒவ்வொன்றையும் தவிர்க்க வேண்டுமென்றால் என்ன செய்யனும், அதற்கான தகவல்களைத் தயாரிக்கத்தான் இந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழு. இப்படி 15 நாள்களா சீன அதிபர் செல்லும் பாதையான ஓம்.எம்.ஆர் சாலை, ஜி.எஸ்.டி சாலை குறித்து பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம்.

அப்பாலே இந்தப் பகுதிகளில் எத்தனை சிசிடிவி கேமிராக்கள் இருக்குது, அவைகளில் செயல் படாமால் இருக்கும்சிசிடிவி விபரம், ஹோட்டல்ஸ், மேன்ஷன்கள், ஐ.டி.கம்பெனிகள், எத்தனை கட்டடங்கள் இருக்கின்றன், எத்தனை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. உயரமான கட்டடங் கள், எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன, டிரான்ஸ்ஃபார்மர்கள், ரயில்வே டிராக்ஸ் என அத்தனையும் நுணுக்கமா கணக்கெடுத்து இந்தக் குழு. இவர்கள் கொண்டுவந்து கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுச்சு.

இப்போ இந்தப் பகுதியில் எந்த மாதிரி பிரச்னைகள் இருக்குது, இதற்கு போலீஸார் எண்ணிக்கை எம்புட்டு தேவை என்பதை எல்லாம் முடிவு செஞ்சோம். கூடவே வழக்கமான வெடிகுண்டு நிபுணர் கள், பல்துறை வல்லுநர்கள் கொண்ட ஆன்டிஸ்பாஸ்மோடிக் டீம் (antispasmodic team) எனப்படும் 35 குழுக்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினோம். சென்னை போலீஸில் இருப்பவர்கள் மட்டு மல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தக் குழுக்கள் அழைத்து வரப்பட்டன.

அடுத்தகட்டமாக, இந்தக் குழுக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சீனியர் ஆஃபீஸர்களை எங்கே பணியமர்த்துவது என முடிவு செஞ்சோம். இதற்காகப் தமிழகத்தில் எல்லா மாவட்டங் களிலிருந்த உயர் அதிகாரிகளையும் இங்கே வரவழைத்தோம். ஹோட்டல்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட குழுக்கள் ஆய்வுசெய்தன.

அப்புறம் சீனப் பிரதமர் இதற்கு முன்பாக இந்தியா வந்தபோது, என்ன மாதிரியான ஆர்ப்பாட்டங்கள், பிரச்னைகள் இருந்தன என்பதைத் தெரிஞ்சிக்கிட்டோம். அதைத் தொகுத்து, நாங்கள் ஒரு வீடியோ உருவாக்கி, பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாருக்கு வாட்ஸ் அப் மூலமாவும் அனுப்பினோம். சீன அதிபர் பயணித்த பாதையை முழுவதுமாக நாங்கள் புகைப்படம் எடுத்தோம். இந்த மெகா ஜாப்-பில் சென்னை போலீஸ் மட்டுமல்ல, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த போலீஸாரும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டனர். `எங்களைக் கஷ்டப்படுத்துறாங்க’ என்ற சின்ன முணுமுணுப்புகூட அவர்களிடம் இல்லை. இதை நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டோம். 5 ஆயிரம் காவலர்கள், 1,000 ஊர்க்காவல்படை போலீஸார் பணியில் ஈடுபட்டாங்க”

திடீர்னு வரும் அசம்பாவிதங்களைத் தடுக்க என்ன வழி என்பதைத் திட்டமிட்டோம். ஃபேஸ்புக், ட்விட்டர், டிரெண்டிங் என அனைத்தையும் கண்காணித்தோம். யாரால் பிரச்னை வரும் என அறிந்து கொண்டு, அவர்களை அழைச்சுப் பேசினோம்.

இதே மாதிரி இண்டியாவின் மற்ற மாநில போலீஸார் மூலம் அங்கு தங்கிருப்பவர்களிடம் பேசினோம். ஒரே நேரத்தில் குழுவா புறப்பட்டு யாராவது சென்னை வருகிறார்களா கண்காணிக்க ஒரு டீம் போட்டோம். கோயம்பேடு, ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையத்தில் பல குழுக்களை இறக்கி விசாரித்தோம். சென்னைக்கு எந்தெந்த இடத்திலிருந்தெல்லாம் வரமுடியுமோ, அந்தந்த இடங்களிலெல்லாம் விசாரணை குழுக்கள் அமைத்தோம். கிருஷ்ணகிரி டோல்கேட்டிலிருந்து இந்த விசாரணை குழுக்களை அமைச்சு, தீவிரமா கண்காணிக்கத் தொடங்கினோம். அதிலும் சந்திப்பு நிகழ்ந்த அன்று, மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு குழுவை வைத்து கண்காணித்தோம்.

ம்.. முக்கியமா போக்குவரத்தை சரிசெய்வது குறிச்சு பல நாள் ஆலோசிச்சோம். போக்குவரத்தை எப்போ முடக்கணும் எப்போ அனுமதிக்கணும் என்பதையெல்லாம் ஆராய்ந்தோம். இந்த விஷய்த்துலே சென்னை மக்கள், நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. அவர்களுக்கு ரொம்ப நன்றி.

error: Content is protected !!