முன்னாள் (மெட்ராஸ்) முதல்வர் ப. சுப்பராயன்

முன்னாள் (மெட்ராஸ்) முதல்வர்  ப. சுப்பராயன்

மாமேதை டாக்டர் சுப்பராயன் தமிழுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும், பொதுவாக இந்திய மக்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்தவர். அதற்காக அயராது உழைத்தவர். 11.09.1889 ஆம் நாள் கொங்குவேளாளக்கவுண்டர் இனத்தில் குமாரமங்கலம் ஜமீன்தார் மகனாகப் திருச்சங்ககோடு,புதுப்பாளையத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். குமாரமங்கலம் ஜமீனை கைப்பற்றவும்,அதன் சொத்துக்களை அடையவும் தமது உறவினர்கள் குழந்தை சுப்பராயனை கொலை செய்யப்படக்கூடும் என்று அவரது தாயார் பாப்பாயம்மாள் அஞ்சினார்.அதனால் வெள்ளையர்-தம் பாதுகாப்பில், (ஆனால் ஜமீன்பணத்தில்) அவரைப் படிக்க வைத்தனர்.

Dr.-P-Subbarayan-Politici

சென்னை தேனாம்பேட்டை, எல்டம்ஸ் சாலையில் உள்ள “நியூவிங்டன் போர்டிங் பள்ளி” சுப்பராயனுக்கு ஆரம்பகல்வியை கற்றுக்கொடுத்த இடம்.வெள்ளையதிகாரிகள் மற்றும் ஜமீன் பிள்ளைகளுடன் சேர்ந்து துவக்கக் கல்வி பயின்றார். அப்பொழுது கிரிகெட்டில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும்,ஆல்ரவுண்டரகவும் சென்னை மாகாண அணியில் விளையாடினார்.புகழ்பெற்ற இந்து உயர் நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயின்றார். 1908 -ல் சென்னைமாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பும், லயோலாக் கல்லூரியில், M.A. பட்டத்துக்குச் சமமானது எனக் கொள்ளப்படும் B.A.(Honours) பட்டப்படிப்பும் படித்தார். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வகுப்பில் முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார்.

தனது கல்லூரித் தோழி ராதாபாய் என்ற மங்களூர் சரஸ்வத் பிராமணர் வகுப்பை சார்ந் மாற்று சாதிக்காரரை மணமுடித்தார். தன் சாதியைச் சேர்ந்த கொங்கனாபுரம் ஜமீன் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, தாய் வற்புறுத்தினார். மாற்றுச் சாதியில் கட்டினால், உயிர் விடுவேன் என்று மிரட்டிக்கூடப் பார்த்தார். அவரை மீறி, ராஜாஜி போன்றோர் சாட்சிக் கையெழுத் திட-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும் இங்கிலாந்து சென்று மேற்படிப்புப் படித்தனர்.லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருக்கும் வாதாம் கல்லூரியில் சுப்பராயனும்,சோமன் வில்லே பெண்கள் கல்லூரியில் இராதாபாய் கல்வி பயின்றனர்.தற்பொழுதும் இங்கிலாந்தில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் அணி சஸ்சக்ஸ்.இந்த மாநிலஅணிக்காக சுப்பராயன் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டப்படிப்பில் நேருவின் வகுப்புத் தோழர்! டாக்டர் அம்பேத்காரும் இவருமே சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பாரிஸ்டர்கள்! இவர் பாரிஸ்டர் படிப்புப் படித்த போது, நேரு இவரது வகுப்புத் தோழராக இருந்தார். இவரும் டாக்டர் அம்பேத்காரும் மட்டுமே சட்டமேற்படிப்பாக டாக்டர் பட்டப்படிப்பு படித்தனர். படிப்பு முடிந்த நிலையில், முதல் உலகப்போர் நடந்ததால், உடனே நாடு திரும்ப முடியாத நிலையில், அவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமருக்கு அந்தரங்கச் செயலாளராக (Private Secretary) அரசுப்பணி செய்தார்!

நாடு திரும்பி, காந்தியார் தலைமையில் சிலகாலம் காங்கிரஸ் பேரியக்கத்தில் பணியாற்றினார். ஆந்திரம் கேரளம் தமிழகம் மூன்று பகுதிகளும் இணைந்த ஒன்றிய சென்னை ராஜதானியில் இரட்டை ஆட்சி முறை இருந்த போது- தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் முதல்முறையாக முதலமைச்சராக (பிரதம மந்திரி அல்லது First Minister) 4.12.1926 முதல் 27.10.1930 வரை பணி புரிந்தார். அவரது அமைச்சரவை சுயேச்சைகளின் அமைச்சரவை. அதற்கு முன்னிருந்த இரு முதலமைச்சர்களும் ஆந்திரர்களே!

திருச்செங்கோடு தொகுதியிலேயே 6 முறை சுயேச்சையாகவும் காங்கிரஸ் வேட்பாளராகவும் நின்று தேர்தலில் வென்றவர் டாக்டர் சுப்பராயன் என்பதறிவீராக! மக்களிடம் அத்தனை செல்வாக்குப் பெற்றவர் அவர்! அவரது சொந்தப்பிள்ளை மோகன் குமாரமங்கலமும், கம்யூனிஸ்ட் கட்சியும் அவருக்கு எதிராக சேலம் பேபி என்பவரை நிறுத்தித்தான் அவரை சுதந்திர இந்தியாவில் தோற்கடித்தனர்!

பிரிட்டிஷார் ஆண்டகாலத்தில், சென்னை ராஜதானியின் முதல் அமைச்சராக சுப்பராயன் இருந்த காலத்தில்–

1. ஜஸ்டிஸ் கட்சி ஏற்கனவே போட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணையை விரிவுபடுத்தி, அற்பத் தொகையினரான பிராமணரே சகல மேல் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில்–தலித்துகளுக்கும் இதர பிராமணரல்லாதவர் களுக்கும்-அரசு அலுவல்களில் பெரும் பங்கு கிடைக்கச் செய்தார்.

2. இந்தியாவிலேயே முதன் முதலில் ஊழியர்களைத் தேர்வு செய்ய சர்வீஸ் கமிஷன் ஏற்படுத்தினார்.

3. ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்திய இந்து அறநிலையச் சட்டத்தின் படி ஏற்படுத்திய அறநிலையத்துறைக்குழுவுக்கு ஒரு ஐயர் ஒரு ஐயங்கார் மட்டுமே நியமிக்கப்பட்டனர். சுப்பராயன் ஆட்சியில் வன்னியர் உள்ளிட்ட, இதர பின் தங்கியசாதிகள், தலித்துகள் அனைவரையும் அறநிலையத்துறை உயர் குழுவின் உறுப்பினராக நியமித்தார்; நிர்வாக அதிகாரிகளை நியமித்து, கோயில் பூசாரிகள்(குருக்கள்) பிடியில் இருந்து கோயில் சொத்துக்களைக் கணக்கெடுத்து, பட்டியல் இட்டு கணக்கில் கொண்டவரச் செய்தார்; மேலும் கோயில் சொத்துத் திருடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

4. ஹரிஜனங்கள் கோவிலுக்குள் சென்று சாமிகும்பிட முடியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த அக்கிரமத்துக்கு முடிவு கட்டி- கோயில் நுழைவுச் சட்டஞ் செய்தவர்.

6. விடுதலைப்போரின்போது, பதவியைத் தூக்கி எறிந்து, வேலூர் சிறையில் அடைபட்டிருந்தார். அதே விடுதலைப்போர்க்ககாணத்துக்காக, அதே காலத்தில் மனைவி ராதாபாய் மகன் மோகன் குமரரமங்கலமும் சிறையில் கிடந்தனர்.

7. குழந்தை முதல் ஆங்கிலேயர்களால் ஆங்கில வழிக்கல்வி தரப் பட்டிருந்தாலும், அவர் தாய் மொழி மேல் ஈடுபாடு கொண்டு தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் கற்ற அறிஞராக இருந்தார். வேலூர் சிறையில் ராஜாஜி போன்ற பல தமிழக, தென்னிந்திய, வட இந்தியத் தலைவர்களோடு சுப்பராயன் சிறை வாழ்ந்த காலத்தில், ராஜாஜி உள்ளிட்டோருக்குத் திருக்குறள் வகுப்பு நடத்தும் அளவுக்கு தமிழில் அவருக்கு பற்றும் பாண்டித்துவமும் இருந்தன!

8. இரட்டை ஆட்சிக்காலத்திலும் அதற்கு முன்பும் சென்னைப் பல்கலைக்கழகம் பார்ப்பனர் கையில் சிக்கி இருந்தது. தமிழுக்கு சரியான இடம் அளிக்கப்படவில்லை. இந்த வருத்தம் அவர் மனதில் இருந்தது. அந்த நேரத்தில் சிதம்பரதத்தில் இருந்த கல்லூரியையும் ரூபாய் 40 லட்சமும் அரசாங்கத்திடம் தர முன்வந்த போது, அதை வேண்டாம் என்றார். தமிழுக்கு உரிய இடந்தர வேண்டி, அண்ணாமலைச்செட்டியார் 40 லட்சம் ரூபாய் முதல் போட்டுத் துவக்கவிருந்த பல்கலைக்கழகத்துக்கு அரசின் அனுமதி பெற்றுத் தந்ததோடு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து-27 லட்சம் ரூபாய் வழங்கினார். அது இன்று பெரிய அளவில் வளர்ந்து-பச்சியப்பன் கல்லூரிக்கு அடுத்தபடியாக தமிழ் உணர்வை வளர்த்தது. தமிழ் இசையையும் வளர்த்தது.

9. மைய தபால்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்திலும் மணியார்டர் படிவம் உள்ளிட்ட தபால் நிலையப் படிவங்கள் அனைத்தும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அச்சிடச் செய்தார்.

10. திருவள்ளுவர் மற்றும் பாரதியாருக்கும் மரியாதை செய்து அவர்கள் உருவம் பொறித்த தபால்தலைகளை வெளியிட்டார்.

11. நேருவிடம் தனக்கிருந்த செல்வாக்கால், இந்தியப்பாராளு மன்றத்தில் வள்ளுவர் படத்தைத் திறக்கச் செய்தார்.

12. இந்திய ஆட்சிமொழிச்சட்ட ஆணைக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர்–இந்தி ஆட்சிக்குத் தகுதியானதல்ல என்றும், பிற மாநிலத்த வர்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் எனவும், வளமான தமிழ் போன்ற மொழிகளை மூன்றாவது ஆட்சி மொழியாக்குமாறும் வாதாடி, பெரும்பான்மை இந்திய மக்களின் உரிமைக் குரலைப் பதிவு செய்தவர்.

13. இந்தோனேசியாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றியபோது, உலகப் புகழ் பெற்ற அணிசேரா நாடுகளின் பாண்டுங் மாநாட்டுக்கு இந்தியாவில் சார்பின் முனைந்து இந்திய ஒத்துழைப்பைத் தந்து வெற்றிகரமாக அது நடக்க, தன் பங்காற்றிப் பெருமை பெற்றவர்.

14. இந்தியாவின் மையப் பாராளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்பி டாக்டர் சுப்பராயனின் துணைவி ராதாபாய் ஆவார். அந்தப் பாராளுமன்றத்தில் அவர் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் கன்னிப் பேச்சே மாபெரும் வீர உரையாகவும் விவேக உரையாகவும் அமைந்தது. அன்னிய ஆட்சியைப் பிய்த்தெடுத்திருக்கிறார். மேலும் பெண்ணுரிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு என்ற இரு தலைப்புக்களிலும் அவர் பேசியதை விட இன்றுவரை யாரும் மிஞ்சிப்பேசமுடியாத அளவுக்கு இருப்பது வியக்க வைக்கிறது! அவரது அகில உலகக் கண்ணோட்டமும் இங்கிலாந்துக் கல்வியும் அத்தகையது!

15. டாக்டரின் பிள்ளைகள் அனைவரும் தலைசிறந்த, மொழி, இனங் கடந்த செல்வங்களாக விளங்கினர்.(1) முதல் மகன் பரமசிவம் குமாரமங்கலம் -தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் “கிங் கமிஷன்” பெற்று இங்கிலாந்தின் சாந்துர்ஸ்ட் பட்டாளக் கல்லூரியில் படித்தவர்; இந்தியப் படைத்தளபதியாக ஓய்வு பெற்றவர். சாதிபாராமல் ஒரு பார்சியை மணந்தவர்.

(2) அடுத்த மகன்-கோபால் குமாரமங்கலம் பெரிய பொறிஞர். நமது நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தைத் தலைமை தாங்கி வெற்றிகரமாக, லாபகரமாக நடத்தி யவர். இவரது மனைவி ஒரு கன்னடக்காரர். (3) மூன்றாமவர் மோகன் குமாரமங்கலம்-புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்; இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர். வெள்ளையனே வியக்கத்தக்க ஆங்கிலம் பேசிய தேசபக்தப் பேரறிஞர். மைய அமைச்சராக இருந்து பாதியில் விமான விபத்தில் இறந்து பட்டவர். வங்கிகள் தேசிய மயம், ராஜ்ய மான்ய ஒழிப்பு போன்ற புகழ்பெற்ற சட்டங்களை இயற்ற இந்திரா காந்திக்கு அரிய துணையாக நின்றவர். அவர் மணந்த வங்கதேசத் தோழிக்குப் பிறந்த ரங்கராஜனுக்கு இன்றைய மைய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான்-தாய் மாமன்! ரங்கராஜனோ ஒரு பஞ்சாபியை மணந்தார்.

4) சுப்பராயனின் ஒரே மகள் பார்வதி-அண்ணன்மாரைப் போல் கொள்கைவாதி. ஒரு மார்க்சியவாதி. அவர் தன் கட்சித் தோழரான மலையாள தேசத்துக் கிருஷ்ணனை மணந்தார். இதைப்போல இந்தி யாவில் அனைத்துப் பகுதிகளையும் இணைத்துச் சம்பந்தம் செய்த, படாடோபமற்றுத் திருமணம் செய்து பகட்டின்றி வாழ்ந்த-மெய்யான இந்திய தேசியக் குடும்பம் இந்தியாவில் வேறு எதுவும் இல்லை எனலாம்.

16. தந்தை பெரியார் காஞ்சியில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் டாக்டர் சுப்ப ராயனின் புகழ்பெற்ற சுயமரியாத உரை சுயமரியாதை இயக்கத்தின் திருக்குறள் போன்றது.

17. ராஜாஜியின் உப்புச் சத்தியாகிரகத்தையும் துவக்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த சுப்பரா யன்தான். அதனால் ஆட்சியும் இழந்தார், சிறையிலும் அடைக்கப்பட்டார் என்பதறிக!

டாக்டர் சுப்பராயன் 1962 இதே அக்டோபர் 6 அன்று காலமானபோது, இன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எதிர்க்கட்சிக்காரராக தமிழக சட்டமன்றத்தில் சூட்டிய புகழாரம்: “தலைவர் அவர்களே! அரசியல் பெருந்தகையாளர் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அறிவியக்கத்திலே நல்ல ஈடுபாடு கொண்டு, கலப்புத்திருமணம் செய்து கொண்டு சமு தாயச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மொழியிலே நீங்காத பற்றுக் கொண்டவர். திருவள்ளுவருக்கும் பாரதி யாருக்கும் அஞ்சல்தலை வெயியிட்ட பெருமை அவருக்கே உரியது. பண விடைத்தாள் தமிழிலேயே அச்சிட உத்தரவிட்டார்.(தமிழில் என்று தவறான எண்ணத்தை உண்டாக்கக் கூடாது. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழி களிலும் வெளியிடச் செய்தார்-ஆசிரியர்) அவர் நடத்திக் காட்டிய நிர்வாகம் என்றென்றும் அழியாது. மாற்றுக் கருத்துக் கொண்ட தம் பிள்ளைகளின் கருத்துகளுக்கும் மதிப்பளளித்தவர். அவருடைய இந்தப் பெருந்தன்மையை நாட்டிலே பரவவிட வேண்டும

error: Content is protected !!