அயோத்தி பிரச்னையை மத்தியஸ்தம் செய்யப் போகும் தமிழர்கள் குழு!

அயோத்தி பிரச்னையை மத்தியஸ்தம் செய்யப் போகும் தமிழர்கள் குழு!

நம் நாட்டில் பன்னெடுங்காலாமன அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக பேசி மத்தியஸ்தம் செய்ய ஒரு குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமை யிலான மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கலிஃபுல்லா தலைமையிலான இந்த குழுவில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம் பெறுவர் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது பெருமைக்குரியது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டு விசாரித்து, வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன.இது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கியது. அதில், அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கலிஃபுல்லா தலைமையிலான இந்த குழுவில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம் பெறுவர் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த
அயோத்தி சமரச பேச்சு வார்த்தை விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதித்தும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் பேச்சு வார்த்தையை தொடங்கி 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே உலக நாடுகளிலேயே தமிழர்களுக்கும், தமிழுக்கும் தனி மகத்துவம் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். அதுபோல இன்றளவும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் தமிழர்களின் திறமையை மெச்சும் வகையில் உயர்ந்த பதவியில் உட்கார வைத்து கவுரவித்து வருகின்றன.

இந்த நிலையில், தற்போது சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப் பட்டு வரும் சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வர 3 மத்தியஸ்தர்களை நியமனம் செய்துள்ளது. இந்த 3 மந்தியஸ்தர்களும் தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் என்பது பெருமைக்குரியது.

இன்று சுப்ரீம் கோர்ட் நியதித்துள்ள மத்தியஸ்தர்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கலிபுல்லா தமிழகத்தை சேர்ந்த தமிழர்.

அதுபோல, வாழும் கலை அமைப்பை நிறுவி, சமூகப்பணியாற்றி வரும் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் தமிழகத்தை சேர்ந்தவர்தான். அதுபோல மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் பஞ்சுவும் தமிழகத்தை சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!