இந்தியாவில் கழிவு மேலாண்மை: -அசோசேம் சர்வே

இந்தியாவில் கழிவு மேலாண்மை: -அசோசேம் சர்வே

உலகமெங்கும் உள்ள நாடுகள் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று, குப்பை. நகரங்களை ஒட்டிய நீர்நிலைகளிலும், ஒதுக்குப்புறங்களிலும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றன குப்பைகள். இத்தனைக்கும் நம் இந்திய திருநாட்டிலும் நம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் எக்க்சசக்க மான விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள். என்னென்னவோ திட்டம் போடுகிறார்கள். எல்லாம் ஏட்டளவில்தான். எந்தத் திட்டமும் 100 சதவீதம் நிறைவேறியதாக சரித்திரமே இல்லை. இந்நிலை யில்குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு பெரிய இடம் தேவைப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பு அசோசேம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தேவையினால் “இப்பெரும் நிலப்பரப்புகள் வேறு பயன்களுக்கு பயன்படுத்த முடியாத உருப்படியற்ற நிலப்பகுதியாக இருக்கும். 2050-ல் 88 சதுர கிமீ நிலப்பரப்பு அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பு அளவுக்கு குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்படும்” என்று இந்தியாவில் கழிவு மேலாண்மை: மாறும் நிலமைகள் என்ற ஆய்வறிக்கையில் அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி கூறியுள்ளது.

இந்தியாவின் 50 சதவீத மக்கள் தொகை நகரப்பகுதிகளிலேயே வாழும் நிலை 2050-ல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 5சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது இந்த அறிக்கை.2021- ம் ஆண்டில் கழிவுகளின் உற்பத்தி 101 மில்லியம் மெட்ரிக் டன்கள் என்றும் 2031-ல் 164 மெட்ரிக் டன்கள் என்றும் 2050-ல் இது 436 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை இருக்கும் முதல் அடுக்கு நகரங்கள் நாட்டின் மொத்த கழிவுகளில் 80 சதவீதம் கழிவுகளை உற்பத்தி செய்யும், என்கிறது இந்த அறிக்கை.

மேலும் இந்தியாவில் குப்பை மறுசுழற்சிக்கு ஆக்க பூர்வமான வழிகாட்டுதல்களோ, திட்டங்களோ இல்லை. ஒன்று, பூமிக்குள் புதைக்க வேண்டும்; அல்லது மேலே மேலே குவித்து மலையாக்கி மேலே செடி வளர்க்க வேண்டும். இவைதான் அரசு தருகிற வழிகாட்டுதல்கள். ஆங்காங்கே சில தன்னார்வக் குழுக்கள் முயற்சிகள் செய்து சிறு சிறு மாற்றங்களை உருவாக்குகின்றன. நிரந்தரத் தீர்வென்று எதுவும் உருவாக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!