கணவர்மார்களைக் காக்க தனி ஆணையம்! – பாஜக எம்.பி.க்கள் கோரிக்கை!

கணவர்மார்களைக் காக்க தனி ஆணையம்! – பாஜக எம்.பி.க்கள் கோரிக்கை!

தற்போது நாடெங்கும் அதிகரிக்கும் ஆண்களை கொடுமைப்படுத்தும் மனைவிகள் மீது நடவடிக்கை எடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்களின் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவற்றில் இருந்து பெண்களைக் காக்க ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் ஆணையம் செயல்படுகிறது. ஆனால் மனைவியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் கணவன்களைக் காக்கவும், அவர்களின் மனக்குறையைக் கேட்டு பிரச்சனைகளை தீர்க்கவும் தனியாக எந்த ஆணையமோ, அமைப்போ இல்லை. இந்நிலையில் கணவர்களை கொடுமைப்படுத்தும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பா.ஜ.க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வரும் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து பாஜக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் கறுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பாஜக எம்.பி. அன்சுயல் வர்மா கூறுகையில், ”இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப் படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. 1998ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இதுபோன்ற விவகாராங்களில் தவறுதலாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Related Posts

error: Content is protected !!