நாயகன் தீரஜ்.-ஜூக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் யங்க்ஸ்டர் வழக்கப்படி முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெறுப்பேற்றும் நோக்கில் கையில் கிடைத்த போதை பவுடரை வாங்கி செல்ஃபி டுக்க முயல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக போதை பவுடர் நாயகன் உடலில் ஏறி விடுகிறது. இதனிடையே , போதை மருந்து கடத்தல் தொடர்பாக லேடி ஜர்னலிஸ்ட் ஒருவர் செய்திகளை சேகரித்து வருகிறார். இதனை கண்டு கொண்ட போதை கடத்தல் கும்பல் டாப் போலீஸ் ஆபீசர் உதவியுடன் அச்செய்தியையும், செய்தியை சேகரித்தவர்களையும் அழிக்க முயல்கிறார்கள். அச்சமயம் மேற்படி கும்பலிடம் நாயகன் & கோ மாட்டி விடுகிறது. ஆக தவறுதலாக எடுத்த போதை கூட ஒருவரது வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது? என்பதை நாயகன் ஏஏ குரூப் பாணியில் சொல்வதே இப்படக் கதை.

error: Content is protected !!