நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியின் அதிபர் வேட்பாளராக சுசனா போட்டியிட்டார். அவர் 58.3 % வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வழக்கறிஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான சுசனா அரசியல் பின்புலம் இல்லாதவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முற்போக்கு ஸ்லோவாக்கியா கட்சியில் இணைந்தார்.
ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் அதிபர், ஸ்லோவாக்கியாவின் மிகக் குறைந்த வயது அதிபர் என்ற பெருமையையும் சுசனா பெற்றுள்ளார்.