லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறியதாக சொல்லப்படும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் உண்மையில் நடந்தது என்ன என்று தெரியவந்துள்ளது.

டிசம்பர் 4-ம் தேதி லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் “1500-வது ஸ்பெஷல் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி விரைவில்” என்று அறிவித்தார். அன்றைய தினமே ஜீ தமிழ் தொலைக்காட்சி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

லட்சுமி ராமகிருஷ்ணனின் மீது புகார் கொடுத்தது யார்? சொல்வதெல்லாம் உண்மையில் நடந்தது என்ன?#ZeeTamil #SolvathellamUnmai

அந்த வீடியோ பதிவில் “இந்த நிகழ்ச்சி நீங்கள் செய்யவில்லை மேடம். உங்கள் மீது ஒரு புகார் வந்திருக்கிறது” என்று அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் கூற, லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக அந்த இடத்திலிருந்து வெளியேறுவார். இந்த வீடியோ பதிவைத் தொடர்ந்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டார்., என்று செய்திகள் வலம் வரத் தொடங்கின.

ஆனால், நடந்தது என்னவென்றால் 1500 நிகழ்ச்சி என்பதால் அதை புதிதாக செய்யலாம் என்று திட்டமிட்டு நடத்தியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ராமர் என்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவது போலவே ‘என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா’ என்று பேசுவது மிகவும் பிரபலம். அவரை நிகழ்ச்சி தொகுப்பாளராக வரவழைத்திருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் மீது அவருடைய கணவர் புகார் கொடுத்திருப்பது போன்று நிகழ்ச்சியை வடிவமைத்து, ராமர் இருவருடனும் பேசுவது போன்று காட்சிப்படுத்தி ஒளிபரப்பியுள்ளார்கள்.

அந்நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் பேசும் போது, “ட்விட்டரில் சண்டை, வாட்ஸ்-அப்பில் சண்டை, படம் பார்க்க போனால் சண்டை என எங்குப் போனாலும் சண்டை” உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசினார். அவர் எங்குச் சென்றாலும், மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அதை தன் பிரச்சினையாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் என்றும் தெரிவித்தார். அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் பதிலளித்திருக்கிறார். இவர்கள் இருவருடைய குற்றச்சாட்டுகளையும் தொகுத்து வழங்கினார் ராமர்.

இந்த நிகழ்ச்சிக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பலரும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய கணவர் இருவரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். அதே வேலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் பேச்சை வைத்து, அவர்களுக்கு இடையே சண்டை என செய்திகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார்கள். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் பதிலடிக் கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

error: Content is protected !!