10 மற்றும் + 2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கு கல்வித்துறை புதிய கட்டுபாடுகள்

10 மற்றும் + 2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கு கல்வித்துறை புதிய கட்டுபாடுகள்

பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்.1-ம் தேதி நிறைவு பெறுகிறது. 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்.13-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதையொட்டி அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
exam feb 26
இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி , “பொதுத் தேர்வுகள் நடைபெறும் மைய வளாகம் அலைபேசிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் யாரும் தங்களது அலைபேசியை தேர்வு மையத்துக்கு கொண்டுவரக் கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தாமே அடித்துவிடும் நிகழ்வு ஒழுங்கீனச் செயல் எனக் கருதப்படும். அக்குறிப்பிட்ட மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தப்படுவதுடன், அடுத்த இரு பருவங்களுக்கும் அவர் தேர்வு எழுத அனுதிக்கப்படமாட்டாது.

பிளஸ்-2 தமிழ், ஆங்கிலம் தேர்வுகளுக்கு 30 பக்க கோடுபோட்ட விடைத்தாள் வழங்கப்படும். உயிர் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு 22 பக்க விடைத்தாளும், கணினி அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்களுக்கான ஓ.எம்.ஆர். தாளும், அத்தோடு 30 பக்க விடைத்தாளும் வழங்கப்படும். கணக்குப் பதிவியல் பாடத் தேர்வு விடைத் தாளில் 1 முதல் 14 பக்கங்கள் கோடு போடாமலும், 15 முதல் 40-வது பக்கம் வரை கோடுபோட்ட விடைத்தாளும் வழங்கப்படும். மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் 38 பக்க விடைத் தாள்கள் வழங்கப்படும்.

விடைத்தாள் வழங்கப்படும் போது மாணவர்கள் பக்க எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.

குறிப்பிட்ட சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது” என்ற குறிப்பு ரையை பேனாவினால் எழுத வேண்டும். கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப் பாடுகள் விதித்துள்ளது” என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அ.புகழேந்தி தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அதன் விவரம்:

* பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்

* முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், ‘ஹால் டிக்கெட்’டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்

* பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்

* இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்

* மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும்

* நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும்

* ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம்

* முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும்

* ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர்

* இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும்; 1:15 மணிக்கு தேர்வு முடியும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!