ராஜபக்‌சே திடீர் மரணம்?! – சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தீ!

ராஜபக்‌சே  திடீர் மரணம்?! – சமூக  வலைத்தளங்களில் பரவும் வதந்தீ!

இலங்கையில் ராஜபக்‌சே அதிபராக இருந்த போது சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டதில் மோசடி புகார் எழுந்ததையடுத்து நேற்று ராஜபக்‌சேயின் மகன் யோஷிதா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
rajapakse jan 31
இந்நிலையில் ராஜபக்‌சே யின் மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் ராஜபக்‌சே மரணமடைந்து விட்டதாக படத்துடன் இணையத்தளம் மற்றும் முகநூலில் செய்தி பரவி வருகிறது. இதையடுத்து வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்ட்ரா கிராம் உள்ளிட்ட சமூக தளங்களில் தீயாய் பரவும் இந்த புகைப் படத்தால் சிங்கள முகநூல் பிரியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் மகிந்தவுக்கு நரகலோகத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என தமிழ் முகநூல் பிரியர்கள் ஆண்டவனை கும்பிடுவது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரு முறையும் ராஜபக்‌சே திடீரென மரணமடைந்தார் எனவும், அவரது இறுதி சடங்கு சென்னையில் நடைபெறும் எனவும், அவரது புகைப்படங்கள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Related Posts

error: Content is protected !!