மே 9ம் தேதி +2 ரிசல்ட் மற்றும் 23-ல் 10ம் வகுப்பு ரிசல்ட்! – தேர்வுகள் துறை அறிவிப்பு

மே 9ம் தேதி +2 ரிசல்ட் மற்றும் 23-ல் 10ம் வகுப்பு ரிசல்ட்! – தேர்வுகள் துறை அறிவிப்பு

தமிழகத்தில் +2 தேர்வு கடந்த மார்ச் 25ம் தேதி முடிவடைந்தது. தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Plus 2 Exam Results
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கியது ஏப்ரல் 9-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களைச் சேர்த்து ஏறத்தாழ 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். இத்தேர்வின் முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது.

error: Content is protected !!