முன்னாள் செயலரான ஆர்.கே மாத்தூர் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த விஜய் ஷர்மாவின் பத்விக்காலம் டிசம்பர் 1 ஆம் தேதியோடு முடிவடைந்ததையடுத்தையடுத்து பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலரான ஆர்.கே மாத்தூர் தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதாவது தனது 65 வயதை பூர்த்தி செய்யும் வரை இவர் அப்பகுதியில் இருப்பார்.
62 வயதான ஆர்.கே மாத்தூர் திரிபுரா மாநில ஐ.ஏ.எஸ் கேடரை சேர்ந்தவர். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் பாதுகாப்புத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டார். ஐஐடி கான்பூரில் படித்த ஆர்.கே மாத்தூர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே, உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் அடங்கிய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, கடந்த புதன்கிழமை மாத்தூரை தகவல் ஆணையராக தேர்வு செய்தது.