மத்திய அமைச்சரவையில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா!

மத்திய அமைச்சரவையில் இருந்து  ஜெயந்தி நடராஜன் ராஜினாமா!

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தெரிவித்து.தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார். ஜனாதிபதியும் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
D-396
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றுவதற்கு வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதாகவும், இதே காரணத்துக்காக மேலும் சில அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஜெயந்தி நடராஜன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது பதவியை மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!