“பெரியார் கொள்கைகளும் – பெருச்சாளிகளின் கொள்ளைகளும்”.By ரவி நாக்

“பெரியார் கொள்கைகளும் – பெருச்சாளிகளின் கொள்ளைகளும்”.By ரவி நாக்

சமீப காலமாய் சமுகவலைத்தங்களில் அடுத்தவர் மனம் நோகடிக்கும் விதமாகவே வளர்ந்து வருகிறது. அதிலும் ஒரு கையாலகத்தனமான சேடிஸ்ட் செயல்கள், பல‌ ம்தங்களை / பண்டிகைகளை / சடங்குகளை / சம்பிரதாயங்களை அவமதிப்பதும், அடுத்த்வர்கள் மகிழ்ந்து ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்கும் அன்று நண்பர்கள் போன்று விடுமுறை வாழ்த்துக்கள் சொல்வதும், கருப்பு கொடி இங்கே காட்டிவிட்டு வீட்டில் கலர் கலராய் சட்டை போடுவதும் ஹிந்துக்கள் கடவுள்களை / வழிமுறைகளை இகழ்வதும் ஒரு பெரிய புற்று நோய் போல் நம்மை அறியாமல் நம்மின் உள்ளே ஆழ்ந்து நுழைந்திருக்கின்றது என்றால் அது மிகைய்ல்ல.

இதை பலர் பல நோக்கத்துக்காக செய்தாலும் பெரும்பாலானோர் செய்வது ஒன்று பெரியாரின் பேரை கெடுப்பதற்க்கும் அல்லது பெரியார் போர்வயை போர்த்தி கொண்டு செய்லபடும் கயமை நிறைந்த போலி கருப்பு சட்டைகள், இவர்களுக்கு டார்கெட் ஹிந்து மதமும் அதனை வழிப்படுவர்களும் தான். பெரியாரின் அடிப்படை கொள்கை என்ன? மூட நம்பிக்கைகளை வாழ்வில் பயன்படுத்தாதீர்கள் / கடவுளின் பெயரில் கயமைத்தனம் பண்ணுபவரை நம்பாதீர்கள் என்ற தெளிந்த சிந்தனயே தவிர – ஹிந்துக்கள் எல்லாம் திருடர்கள் என்று திரித்து கூறிய சில பகுத்தறிவாளர்கள் போல் அல்ல.
31 - ravi group
எல்லோருக்கும் சம உரிமை என்ற் அடிப்படையில் பெரியாருக்கு பக்தியை உணர அவருக்கு எல்லா வகை உரிமை கொடுக்கபட்டது. அவர் கோயிலுக்கு சென்றார் கோயிலின் தலைமை பொறுப்பை கூட ஏற்றார் அங்கே கடவுளின் பெயரில் நடக்கும் தில்லுமுள்ளுகளை கண்டு வேதனை கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வந்தார் அது தான் அவரின் கொள்கை. பெரியாருக்கும் மதத்தின் மேலோ அல்லது கடவுளின் மேலோ ஒரு ஆதீத பற்று ஏற்பட்டு இருக்குமாயின் இன்று அந்த கொள்கை இருந்திருக்காது.

இப்படி ஒரு உண்மை இருக்கும் போது இங்கே அடுத்தவர் மனதை புண்படுத்த ஒரிஜினல் ஐடியில் பெரியாரின் கொள்கை என்று அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு அடுத்தவரை இகழ்வது எந்த வகையில் நியாயம். ஒரு பெரிய கருப்பு சட்டை கூறுகிறார் எல்லோருக்கும் அர்ச்சகர் உரிமை கொடுக்கபடவேண்டும் என்று, கொடுக்கலாம் அதற்க்கு முன் எல்லோருக்கும் பாதிரியார் பதவியோ அல்லது எல்லோருக்கும் ஜமாத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என ஏன் எந்த தைரியம் உள்ள தலைவனுக்கும் சொல்ல தகுதியில்லை.

இவர்களின் அர்ச்சகர்களின் அஜென்டா கடவுளையோ அல்லது சம உரிமை நோக்கோ இல்லை – உண்மையில் அங்கு கிடைக்கும் பெரிய சில்லரைகள் / பெத்த உண்டியல்கள் / பெரும் கோயில் சொத்துக்கள் தான். இன்று பரமாரிக்க அல்லதூ ஒரு வேளை பூசை கூட செய்ய முடியாமல் பல கோயில்கள் இருக்கும் பல‌ கோயில்களுக்கு இவர்கள் யாரும் அர்ச்சகர்கள் ஆக விருப்பம் இல்லை அதை தடுக்கவும் யாரும் இல்லை ஆனால் இவர்களின் உண்மை எண்ணம் ஹிந்துக்களை அவமதிப்பது மட்டும் தான்.

சிலர் இன்னும் ஒரு படி போய் அறிவுக்கொழுந்துகளாய் ஆர் எஸ் எஸ் அல்லது ஹிந்துத்துவாவை பின்பற்றும் சில காவிக்கேடிகளை நோக்கி கைகாட்டி ஒட்டுமொத்த ஹிந்துக்களை குற்றவாளிகளாய் சித்தரிப்பது தான். ஹிந்துக்களின் எல்லோரும் ஹிந்துத்துவாவை நம்புவதில்லை அவர்கள் பிஜேபி ஆதரவாளர்களும் இல்லை மற்றும் ஹிந்து என்றாலே நரேந்திர மோடியின் சிஷ்ய பிள்ளைகளும் இல்லை. ஹிந்துத்துவாவை பயன்படுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஹிந்துக்களை நோக்கி கையை நீட்டும் முன் இது கிருத்துவ / இஸ்லாமிய / புத்த மற்றும் அனைத்து மதத்திலும் இந்த மாதிரி மதத்தின் பெயரில் தீவரவாத்த்தை வளர்ப்பவர்கல் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதை நன்கு நினைவு கொள்க. மதம் என்றும் தீவரவாதத்தை போதிப்பதில்லை அதை உண்மையாக போதிப்பது அந்த அந்த மதத்தில் உள்ளவர்கள் தன் வயிற்றை வள்ர்ப்பதுக்காகவே தானே தவிர கடவுளின் மேல் உள்ள பற்றின் மேல் அல்ல.

இந்தியாவில் சிறுபான்பயினர் அவமதிக்கபடுகிறார்கள் / நசுக்கபடுகிறார்கள் என கூட்டத்தின் நடுவே கூக்குரல் இடுபவர்கள் இன்னொரு பெரிய உண்மையை அறிந்து கொள்க – இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்கள் என்று புள்ளி விவரம் கூறினாலும் இன்று ஹிந்துக்கடவுளை கடலில் கரைக்க கூட பல‌ பெர்மிஷனும் பெரிய காவல் துறை பட்டாளமும் பதட்டமும் இருந்தே ஆக வேண்டும் என்பதே பெரிய அவமானம்

இதை விட எந்த விதத்தில் பெரும்பான்பையினர் சொந்த நாட்டில் அவமானப்படவேண்டும் சொல்லுங்கள். மசூதி இடிப்பை சிலர் முன்னிறுத்தி பேசலாம் அதுவும் நான் மேலே கூறியது போல் சிலரின் அரசியல் சொந்த லாபத்துக்காவே தானே தவிர ஹிந்துக்களின் பவரை காட்ட அல்ல.

அந்த மசூதி இன்று நேற்று அல்ல பல வருடங்கள் பத்திரமாய் இருப்பதும் இன்று பல லட்ச மசூதிகள் இந்தியாவில் பத்திரமாய் இருப்பதும் ஒரு உதாரணம். பதிலுக்கும் புத்த / ஹிந்துக்கள் கோயில்களையும் வடிவங்களையும் இடித்த தாலீபான் முஸ்லிம்களை முன்னிறுத்தி கயமைத்தனம் பண்ணும் போலி ஹிந்துக்களுக்கும் ஈக்குவல் கன்டனங்கள் தான் என்னுடைய தரப்பில் இருந்து. இந்த மாதிரி ஆட்களை இனம் கொண்டு அவர்களுக்கு எடுத்து புரிய வையுங்கள் அல்லது அவர்களுடைய தொடர்பை துண்டிப்பதும் அதை பின்னிருந்து ரசிப்பதும் உங்களின் மல்டி பர்ஸ்னாலட்டியை பொருத்தே……………………………..

WARNING – எச்சரிக்கை – இங்கே எனக்கு நன்கு தெரியும் யார் யார் என் உண்மை நண்பர்கள் என்று அவர்கள் தங்களின் கருத்துக்களை பதிய எந்த ஒரு தடங்கலும் இல்லை – ஆனால் பேருக்கு நண்பராய் இருந்து கொன்டு ஒரு நாள் கூட காணாதவர்களை அவ்வபோது கண்டு அழித்து வருகிறேன் அப்படிபட்டவர்கள் என்றாவது கான்ட்ரவர்ஸி விஷயங்களுக்கு மட்டும் ஆஜர் ஆனால் அவர்கள் வாலை ஒட்ட நறுக்குவேன். அதே போல் இந்த போஸ்ட்டுக்கு தேவையான விஷயத்தை மட்டும் விவாதியுங்கள் உங்கள் தனிபட்ட சண்டையோ அல்லது கமென்ட் மேல் கொண்ட காழ்ப்புண்ர்ச்சியோ விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை.

ஏதாவது ஒரு கமென்ட் பிடிக்காமல் இருந்தால் அவரின் தனிப்பெட்டிக்கோ அல்லது எனக்கோ தெரியபடுத்துங்கள் அதை தவிர்த்து என் கமென்ட் பாக்ஸில் தக்காளி கெச்சப்பை கொட்டினால் கொலைவெறி ஆகிவிடுவேன்.

error: Content is protected !!