தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி!

தமிழகத்தையே அதிர வைத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ம் தேதி நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் பேரணி நடத்த உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

அதன்படி , மே 22ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். ஏதேனும் ஒரு உள் அரங்கில் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தலாம். அதில் 250 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் அமைதியான முறையிலேயே நடத்த வேண்டும் என்றும், நினை வஞ்சலிக் கூட்டத்தை காவல்துறை விடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மே 23ம் தேதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடை பெறுவதால் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், உள் அரங்கில் நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்திருக்கும் ஐகோர்ட், ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க இயலாது என்று கூறிவிட்டது.

மேலும், நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஏராளமான மக்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார். இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று ஐகோர்ட் நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!