திருச்சி என்.ஐ.டி. காலேஜில் ஜாப்!

திருச்சி என்.ஐ.டி. காலேஜில் ஜாப்!

தமிழகத்தில் உள்ள ஒரே என்.ஐ.டி., கல்லுாரி திருச்சியில் உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் தற்காலிக ஆசிரியர் பணி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்: ஆர்க்கிடெசர் பிரிவில் 7, சிவில் இன்ஜினியரிங் 7, கம்ப்யூட்டர் சயின்ஸ் 10, இ.இ.இ.,யில் 6, இ.சி.இ., யில் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் 4, மெக்கானிக்கில் 8, மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்கில் 5, புரொடக்சன் இன்ஜினியரிங்கில் 9, எனர்ஜி அண்டு என்விரான்மென்டில் 2, இயற்பியலில் 3, வேதியியலில் 2, கணிதத்தில் 7, ஹியூமானிடீஸ் அண்டு சோசியல் சயின்ஸ் – எகனாமிக்சில் 2, ஆங்கிலத்தில் 5ம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 6, மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் 7ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய பிரிவில் முதல் வகுப்பில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் வகுப்பில் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டம் முடித்திருப்பதோடு பி.எச்டி., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும்.

The Registrar, NIT, Tiruchirappalli – 620 015, Tamil Nadu

கடைசி நாள் : 2018 ஜூலை 18.

விபரங்களுக்கு :  ஆந்தை வேலைவாய்ப்பு!

error: Content is protected !!