தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் மென்பொருள் ரெடி! – இது நம்ம மெட்றாஸ் தயாரிப்புங்கறோம் !!

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் மென்பொருள் ரெடி! –   இது நம்ம  மெட்றாஸ் தயாரிப்புங்கறோம் !!

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! பார்வையற்றோர் முன்பெல்லாம் ‘பிரெய்லி’ முறையில் வாசித்து வந்த காலம்போக, கம்ப்யூட்டர் யுகமான பின்னர் பாடம், கதை, கட்டுரைகளை ஒலிவடிவில் படித்துக்காட்டும் நவீன மென்பொருட்கள் (சாப்ட்வேர்) நடைமுறைக்கு வந்தது. ஆனால், இந்த மென்பொருட்கள் உலகின் பிரசித்திபெற்ற ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தான் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி போன்ற இந்திய மொழியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் மாநில மொழிகளில் தயாராகியுள்ள சில குளறுபடியான மென்பொருட்கள், அம்மொழிகளின் துல்லியமான உச்சரிப்பை வழங்க தவறிவிட்டன.
tamil soft jan 16
இந்தக் குறையை போக்கி அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் ஆய்வுகளை நடத்திவந்த மதறாஸ் ஐ.ஐ.டி. பொறியலாளர்கள் தற்போது அம்முயற்சியில் பெரும் வெற்றி கண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு உள்பட 13 இந்திய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நவீன மென்பொருளானது கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சாப்ட்வேரின்மூலம், பார்வையிழந்தோர் மட்டுமின்றி, வாசித்தல் குறைபாடு உடையவர் களும் எழுத்து வடிவில் உள்ள பாடம், கதை, கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்டு நினைவில் இருத்திக் கொள்ளலாம். வரும் 2018-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள சுமார் பத்து கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!