ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கருப்பை கேன்சர்:பலியான பெண் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் ஃபைன்!

ஜான்சன் & ஜான்சன் பவுடரால் கருப்பை கேன்சர்:பலியான பெண் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் ஃபைன்!

நம் நாட்டைப் பொறுத்த வரை இங்குள்ள மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் நோக்கில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப்படுவது சகஜமான விஷய மாகி விட்டது..அதிலும் ஜனங்களின் உயிரோடு விளையாடும் பல பொருட்களை இந்தியாவெங்கும் உள்ள கடை களில் தாராளமாகக் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்…

நிமுசுலிட் (Nimesulide)

இந்த நிமுசுலிட் என்பது ஒரு வலிநிவாரணி மாத்திரை. இம்மாத்திரை அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தபடவே இல்லை. ஆனால் இந்தியாவில் இம் மாத்திரை அதிகம் கிடைக்கிறது. அந்நாடுகளின் மார்க்கெட்டுகளில் விற்கப்படாததற்கு காரணம் என்னவென்று தெரியுமோ? இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மேலும் காய்ச்சலுடன் உள்ள குழந்தைகளுக்கு இம்மாத்திரையைக் கொடுக்கவே கூடாது. ஆனால் இந்தியாவில் இம்மாத்திரையை பல டாக்டர்களே சிபாரிசு செய்வார்கள்.

மேகி

சில நாட்களுக்கு முன்பு மேகியில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளுடமேட் (MSG) மற்றும் ஈயம் (Lead) இருப்பதாக சோதனையில் தெரியவந்தது நினைவிருக்கும். இதிலுள்ள MSG-யை அதிகமாக உடலில் சேர்த்து வந்தால் கல்லீரல் பிரச்சனைகள், மூளை பாதிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும். மேலும் MSG-யானது ஒருவரை அப்பொருளுக்கு அடிமைப் படுத்திவிடும்.

கோலா

காற்றூட்டப்பட்ட பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நன்கு தெரிந்ததே. மேலும் இது உடல் பருமனை அதிகரிக்கக் கூடியதும் கூட. ஆனால் கருப்பாக இருக்கும் அனைத்து பானங்களும், இன்னும் மோசமானது. ஏனெனில் இவற்றில் அஸ்பார்டேம் என்ற செயற்கை சுவையூட்டி, உடலுக் குள் செல்லும் போது மெத்தனாலாக மாறுகிறது. அதிலும் சூடான நிலையில் மெத்தனால் வாயு உடலுக்குள் செல்லும் போது, அது பார்வையை இழக்கச் செய்யும்.

சிகரெட்

இந்தியாவில் சிகரெட்டை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது தான் இந்தியாவில் பல மக்களின் உயிரைக் குடிக்கிறது. இதில் உள்ள நிக்கொடின் என்ற வேதி பொருள் மனிதனின் நுரையிரலை அழிக்கும் தன்மையுடையது மேலும் நாளடைவில் இது கேன்சரை உருவாக்கும் குணம் உடையது.

இந்த வரிசையில் இன்றளவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத் தின் தயாரிப்பான, அதன் டால்க்களில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல் பொருட்கள் இருப்பதாக, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்காவில் இன்றும் ரிக்கார்ட் செய்யப் பட்டுள்ளன. அத்துடன் , “Johnson’s No More Tears baby shampoo“வில் கூட மிகுந்த நச்சு பொருட்கள் கலந்திருப்பதாக அமெரிக்க நுவர்வோர் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் அமெரிக்காவில் 2009-ம் ஆண்டு, பல்வேறு அமைப்புகள் சேர்ந்து “பாதுகாப்பான அழகு சாதன பொருட்களுக்கான” விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தொடங்கினார்கள். அந்த பிரச்சாரத் தின் மூலம், ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பிய துடன் மட்டுமல்லாமல், அந்த பொருட்களை புறக்கணிக்குமாறும் மக்களிடம் வலியுறுத்தினார்கள். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் , தங்களுடைய நிறுவனத் தின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் , dioxane மற்றும் formaldehyde-டை, இனிமேல் பயன்படுத்த போவதில்லை என்று 2012-ம் ஆண்டு தெரிவித்தது. dioxane மற்றும் formaldehyde இரண்டுமே மனித உடலில் கேன்சரை உருவாக்குபவை என்பது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே இந்தியாவில், மும்பையில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தில் தயா ரிக்கப்பட்ட, குழந்தைகள் பவுடரில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதாக புகார் எழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு, அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் பட்டது. விசாரணையில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான் சன் அன்ட் ஜான்சன் ஆலையில், அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை, 2013-ம் ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும் Shower to Shower பவுடரை தன் அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த ஆண்டு Jacqueline காலமாகி விட்டார். இதையடுத்து, அவருடைய மகன் ஜேக்கி பாக்ஸ் வழக்கை தொடர்ந்து நடத்தினார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் – அதாவது திங்கள் (22.02.14) மாலை வழங்கப்பட்ட தீர்ப்பில், “ஜான் சன்&ஜான்சன் நிறுவனம் தவறு செய்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை பொது மக்களுக்கு தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தது, தவறை மறைத்து சதித்திட்டம் தீட்டியது மற்றும் மோசடி செய்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows கூறுகையில் “*ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் நிறுவன பவுடர்களில் கலந்திருக்கும் டால்க்(Talc) கேன்சரை உருவாக்கும் என்பது அந்த நிறுவனத் தின் உரிமையாளர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தெரியும்.ஆனால், விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு, அதை பற்றிய உண்மையை மக்களிடமிருந்து அவர்கள் மறைத்து விட்டனர். அதை பற்றிய ஒரு எச்சரிக்கையை கூட, ஜான்சன்ஸ்&ஜான்சன்ஸ் நிறுவன தயாரிப்புகளில் வெளி யிட அவர்கள் தயாராக இல்லை. தெரிந்தே இந்த விவகாரத்தை, அந்நிறுவனத்தினர் மறைத் திருக்கிறார்கள். டால்க் பற்றிய அந்நிறுவன டாக்குமன்ட்களை படித்தால், பீதியூட்டும், ஆத்திர மூட்டும் வகையிலான விஷயங்களும், கார்பரேட் பேராசைகளும், மனித உயிரின் மீதான அவர்களின் அலட்சியமும் தெரிய வருகிறது” என்றும், தெரிவித்துள்ளார்.

மேலும், இதை முன் வைத்தே தான் வாதிட்டதாகவும், Jacqueline போன்ற அற்புதமான பெண்மணி நீண்டநாள் வாழ்ந்திருக்க வேண்டியவர் என்றும், இருப்பினும் அவருடைய வழக்கில் நீதி பெற்றுத்தந்ததை மிகப்பெரும் கவுரமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக வழக்கறிஞர் Ted G. Meadows குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது Jacqueline வழக்கறிஞர் Ted G. Meadows தரப்பில் 1977 -ம் ஆண்டு ஜான்சன் & ஜான்சன் நிறுவனதிற்குள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அளிக்கப்பட்ட குறிப்பை, முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

தற்போது கார்பரேட் நிறுவனங்களுக்கான ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி “வழக்கை விசாரித்த நீதிபதிகளான foreman, Krista Smith ஆகியோர், வழக்கறிஞர் Ted G. Meadowsன் வாதத்தை ஏற்று கொண்டதாகவும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டாக்குமென்ட்களே அந்நிறுவனத்தின் தவறுகளுக்கு உறுதியான சான்றாக இருந்ததாக நீதிபதிகள் நம்பியதாகவும்” குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்தே, ஜான்சன் &  ஜான்சன் டால்க் பயன்படுத்தியதால் கருப்பை கேன்சர் வந்து பலியான ஜாக்குலின் குடும்பத்திற்கு ஐநூறு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க Missouri நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இதே ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு பற்றி வந்த வேறொரு பகீர் குறித்து அறிய வேண்டுமா? க்ளிக்

error: Content is protected !!