சேதுபதி – விமர்சனம்
நானும் ரவுடி தான் என்று குரல் கொடுத்த விஜய்சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் டைரக்டர் தயவில் தெறி போலீஸ் ஆக சேதுபதியில் தோன்றி கவர்ந்துள்ளார் விஜய்சேதுபதி. வழக்கமான அதே போலீஸ் கதையை சுவா ரஸ்யமாகவே கொடுத்துள்ளார்கள் . அதாவது மதுரை ஏரியா இன்ஸ்பெக்டர் அவரது எல்லைக்குட்பட்ட பகுதி யில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப் படுகிறார். அந்த குற்றத்தை இன்வெஸ்டிகே த பண்ணும் போது அந்த ஊரில் மிக முக்கியமான புள்ளியான வாத்தியார் தான் குற்றவாளி என்று தெரிய வருகிறது. சேதுபதி வாத்தியாரை கைது செய்கிறார். இதுனாலே இரண்டு பேருக்கிடையே பகை புகை மூட்டம் போடுது. இறுதியில் போலீஸ் சேதுபதி எப்புடி கெலிச்சார் என்பதே படத்தின் கதை.
படத்தின் பலம் போலீஸ் கேரக்டரின் யதார்த்தப் படைப்பு தான். ஐ பி எஸ். அப்படீன்னா சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பத்து பேரை பறந்து அடித்துதான் பலத்தைக் காட்ட வேண்டும் என்று யோசிக்காமல் ஒரு சராசரி ஆம்பிளைக்கு என்ன பலம் இருக்குமோ அதை வைத்து சண்டை போடுவதும்,. வீட்டை விட்டு வெகுதூரம் இருக்கும் போது வில்லன்கள் வீட்டை சூழ்ந்த நிலையில் ஜஸ்ட் போனிலேயே ஐடியா சொல்லி . தப்பிப்பது என்று சேதுபதி நன்றாகவே நடித்து இருக்கிறார். குறிப்பா தயக்கமே இல்லாமல் நாயகி காலில் விழும் காட்சியில் பாராட்டு வாங்குகிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது நல்ல தந்தையாக, மனைவியுடன் கொஞ்சலில் பெண்களின் ஆதர்ச கணவனாக, இன்னும் என்னவாகவோ அத்தனையாகவும் அசத்தியிருக்கிறார்.ஆனாலும் வசனம் மற்றும் குரலில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாததால் முழு ஸ்கோரை தவற விட்டு விட்டார்
ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே ரம்யா நம்பீசனுக்கு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கணும்., இன்றைய நடிகைகள் யாரும் இப்படி துணிந்து நடித்திருக்க மாட்டார்கள்., ஆனாலும் எப்போதும் ஹஸ்பண்ட் மேல் காண்டாவீ இருப்பவர் ‘ என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்கணு ம் என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக இருக்கும் ரோலில் மிளிர்ந்துள்ளார் வேல ராமமூர்த்தி பார்வையிலேயே மிரட்டுகிறார்.
ஆனாலும் ஒரு போலீஸ் + ஊர் பெரிசு வில்லன் என்ற பழைய பார்முலா என்பதால் அங்காங்கே சலிப்பு வந்தாலும் ஒரு தடவைப் பார்க்கலாம்.