“சேதுபதி டைட்டிலை சொன்னதும் பயந்தேன் .. ஏன் தெரியுமா?” – விஜய் சேதுபதி பேச்சு + மூவி ஸ்டில்ஸ் + டீசர்!

“சேதுபதி டைட்டிலை  சொன்னதும் பயந்தேன் .. ஏன்  தெரியுமா?” – விஜய் சேதுபதி  பேச்சு  + மூவி ஸ்டில்ஸ் + டீசர்!

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை தந்த அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் “சேதுபதி”. ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை யையும், அவரது குடும்பத்தையும் பற்றிய கதையிது என்றார் அருண்குமார். அருண்குமார் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் மதுரை கதைக்களத்தில் படத்தை எடுத்துள்ளார். அதற்காக மதுரை பின்னணியை கொண்ட படங்களில் இடம்பெறும் பறந்து பறந்து சண்டையோ, அரிவாள் கலாச்சாரமோ இந்தப் படத்தில் இருக்காது என உறுதிபட அறிவித்தார். இதுவரை வந்துள்ள போலீஸ் கதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.


இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி பேசும்போது, ‘‘அருண் குமார் இந்த போலீஸ் கதையை சொல்லும்போது இந்த கதையும், கேரக்டரும் எனக்கு ‘செட்’டாகுமானு யோசித்தேன். பிறகு ஒருவித தயக்கத்தோட தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்ற டிஸ்கஷன் நடந்தபோது அருண்குமார் ‘சேதுபதி’ங்கற தலைப்பு ரொம்ப பொருத்தமாக இருக்கும், அதை வைக்கலாம் என்று சொன்னார். அவர் ‘சேதுபதி’ என்ற டைட்டிலை சொன்னதும் எனக்கு ஒருவித பயம் வந்துருச்சு. ஏனா நாம ரொம்ப ஓவரா போறோமோன்னு! படம் ஏதாவது ஆச்சுனா அவ்வளவு தான்! மொத்தமும் எனக்கு தான் கிடைக்கும்! ‘சேதுபதி’ங்கற தலைப்பு வேண்டாம்னு சொன்னேன். ஆனால் இயக்குனர் அருண்குமாரும், ஒளிப்பதிவாளர் தினேஷும் அந்த தலைப்பில் உறுதியாக, நம்பிக்கையோட இருந்தாங்க! அதனால கடைசியில நானும் ஒத்துக்கிட்டேன்.


‘பீட்சா’ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் நானும், ரம்யா நம்பீசனும் இணைந்து நடித்துள்ளோம். ரம்யா நல்ல நடிகை! அவங்களுக்கு ஈடு கொடுத்து நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்களை ‘பீட்சா’ படத்திற்கு பிறகு இப்போதான் பார்க்கிறேன். ‘ஆனா எங்களுக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க, என்று ‘சேதுபதி’யில் நடித்துள்ள இரண்டு குழந்தைகளை அணைத்தவாறு ‘யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ‘சேதுபதி’யில் நானும், ரம்யாவும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா நடிச்சிருக்கோம்’’ என்று தெரிவித்தார் !

Related Posts

error: Content is protected !!