கனரா பேங்கில் புரொபேஷனரி ஆபீஸர் போஸ்டிங் ரெடி!

கனரா பேங்கில் புரொபேஷனரி ஆபீஸர் போஸ்டிங் ரெடி!

பொதுத்துறை வங்கி களில் கனரா வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைமையகம் பெங்களூரு. நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் காலியாக உள்ள 450 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை, மணிப்பால் பல்கலையின் ஓராண்டு Post Graduate Diploma in Banking and Finance course என்ற சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

வயது: 2018 ஜன. 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

படிப்பு விபரம்: மணிப்பால் பல்கலை நடத்தும் இந்த ஓராண்டு படிப்புக்கான கட்டணம் ரூ. 3.50 லட்சம். இதற்கு வங்கிக்கடன் வசதிகளும் உள்ளன. படிப்பில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுபவர்கள், புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெறமுடியும்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்

கட்டணம் ரூ.708.

கடைசி நாள் : 2018 ஜன. 31.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!