ஆர்யாவின் தயாரிப்பில் ”அமர காவியம்”

ஆர்யாவின் தயாரிப்பில் ”அமர காவியம்”

வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா ,அந்த பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார் . தனது பட நிறுவனமான ‘ The show people ‘ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் ‘அமர காவியம் ‘ படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு முடிவடைந்தது.பெரும் வெற்றி பெற்ற ‘ நான் ‘ திரை படம் மூலம் திரை உலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிபதிவு செய்து இயக்கும் காதல் கதை இது . ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘அமர காவியம் ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மியா ஜார்ஜ் .
AK  Dina karan 16cm x 25cm-1

AK Hindu 16cm x 25cm

AK Times 16cm x 25cm
‘ காதல் பற்றிய படங்கள் திரை படங்கள் தோன்றிய காலத்தில் வந்த கொண்டே தான் இருக்கிறது .காதல் ஒரு நூல் இழை போல , அதை திறம் பட நெய்து பார்பவரை கவர செய்வது ஒரு இயக்குனரின் கடமை .ஒவ்வொரு நெசவாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு, அதை போலவே ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு style இருக்கும் . ‘நான் ‘ படத்தில் ஒரு வித்தியாசமான திரை கதை அமைப்பில் கதையை சொல்லி இருப்பதை போல் , முற்றிலும் ஒரு புதிய பாணியை இந்த படத்தின் திரை கதை அமைப்பில் கையாண்டு இருக்கிறேன் .

நான் பொதுவாகவே கதையை எழுதும் போதே அந்த கதைக்கான களத்தில் இருந்தே , தட்ப வெப்பத்தையும் உணர்ந்து எழுதுவது வழக்கம் . கதை களம் கதையின் நாயகன் நாயகிக்கு இணையாக முக்கியம் . அதற்காகவே இதுவரை திரையில் கான்பிதிராத இடங்களை தேடி எடுத்து படப்பிடிப்பு நடத்தினேன் . நானே ஒளிபதிவாளராக இருப்பது இந்த வகையில் எனக்கு பெரிதளவு உதவுகிறது . விஞ்ஞானத்தை போலவோ , மெய்ஞானத்தை போலவோ அல்ல காதல் .நாம் அனுபவித்தது , உணர்ந்தது என வாழ்வில் ஐக்கியமாகி போன ஒரு உணர்வு .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டு , ‘ அமர காவியம் ‘ படத்தில் எல்லோருடைய காதலும் இருக்கும் ‘ என்று கூறினார் கதை , திரை கதை , இயற்றி ஒளிபதிவு செய்து இயக்கும் ஜீவா ஷங்கர் .

error: Content is protected !!